குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-06-04 11:42 GMT

விராலிமலை காமராஜர்நகர் பகுதியில் சுமார் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் செல்பவர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலை ஓரத்திலேயே கொட்டி விடுகின்றனர். நீண்ட நாட்களாக இந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றாததால் அந்த இடம் குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. ஊராட்சி நிர்வாகத்திற்கு அவ்வப்போது புகார்கள் செல்லும் போது மட்டும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் அந்த குப்பைகளை தீயிட்டு எரித்து விடுகின்றனர். அதன் பிறகு மீண்டும் அதே இடத்தில் பொதுமக்கள் தங்கள் குப்பைகளை கொட்டுவதால் ஒருவித துர்நாற்றம் வீசுவதோடு, அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. அது மட்டுமின்றி அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்வதோடு குப்பைகளை மிதித்துக்கொண்டு செல்லும் நிலைமைக்கு உள்ளாகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்