அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-05-24 16:13 GMT

திருச்சி மேல அரண் சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு தினமும் நூற்றுக் கணக்கான வாசகர்கள் மற்றும் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவ- மாணவிகள் வந்துசெல்கின்றனர். நூலகத்தின் நுழைவு பகுதிகளிலும், நூலகத்தின் மரங்கள் இருக்கக்கூடிய பகுதிகளிலும் குப்பைகளும், தேவையற்ற பிளாஸ்டிக் பைகளும் குவிந்து கிடக்கின்றன. மாதக்கணக்கில் சுத்தப்படுத்தாத காரணத்தினால் குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்