நோய் பரவும் அபாயம்

Update: 2023-05-17 10:58 GMT

திருச்சி மாவட்டம், நெம்பர் 1 டோல்கேட் சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் வாய்க்காலில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் இந்த குப்பைகளுக்கு அவ்வப்போது தீ வைக்கப்படுவதால் முதியவர்கள் மூச்சு விடுவதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்