அகற்றப்படாத கழிவுகள்

Update: 2023-04-26 13:35 GMT

திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. சந்தை கழிவுகளை அகற்றி வந்த ஊராட்சி மன்ற நிர்வாகம் கடந்த 2 வாரங்களாக உத்தமர்கோவில் பகுதியில் உள்ள சந்தை கழிவுகளை அகற்றாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்