அப்புறப்படுத்தப்படாத கழிவுகள்

Update: 2023-04-09 11:54 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட உத்தமர்கோவில் பகுதியில் வார சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெற்று வந்தது. சந்தை கழிவுகளை சுத்தம் செய்து வந்த பிச்சாண்டார் கோவில் ஊராட்சி நிர்வாகம் தற்போது செய்யாததால் அழுகிய நிலையில் உள்ள காய்கறிகள், குப்பைகள் மூலம் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. பிச்சாண்டார் கோவில் ரெயில் நிலையம் செல்லும் பயணிகள், பிரசித்தி பெற்ற உத்தமர்கோவில் செல்லும் பக்தர்கள், அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் என பலர் முகம் சுளிக்கும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக சந்தை கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்