சுகாதார சீர்கேடு

Update: 2023-01-22 11:20 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள கொப்பம்பட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகளை நாகநல்லூர் முத்தையம்பாளையம் சாலையில் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதாரக்கேடுகள் ஏற்படுவதுடன், குப்பைகளுக்கு தீ வைக்கும்போது அதிக அளவில் புகை மண்டலம் உருவாகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள முதியவர்களுக்கு முச்சுத்திணரல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்