சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-11-27 12:01 GMT

புதுக்கோட்டை- அண்டக்குளம் சாலையின் இருபுறமும் சமூகவிரோதிகளால் இரவு நேரங்களில் கழிவுநீர், ஆடு, கோழி இறைச்சிகளின் கழிவுகள், பயன்படுத்தப்படாத வீட்டு உபயோக பொருட்கள், மருத்துவ கழிவுகள், உடைந்த கண்ணாடிகள், கட்டிட இடிபாடுகள், கற்கள் ஆகியவை கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்