குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-11-16 11:40 GMT
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம், அல்லித்துறை ஊராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில், நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்திற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நூலகத்தின் அருகே சாலையோரம் மலைபோல் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்