சுகாதார சீர்கேடு

Update: 2022-11-09 14:03 GMT

கோவை மாநகராட்சி 36-வது வார்டு மாணிக்க விநாயகர் கோவில் அருகே குப்பை தொட்டிகள் உள்ளன. ஆனால் அதில் குப்பையை போடாமல் வெளியே சிலர் கொட்டிவிட்டு செல்கின்றனர். இது தவிர தொட்டியில் உள்ள குப்பையை மட்டும் பணியாளர்கள் அகற்றிவிட்டு, வெளியே கிடக்கும் குப்பைகளை அகற்றாமல் செல்கின்றனர். இதனால் குப்பை தொட்டி காலியான நிலையிலும், வெளியே குப்பைகள் குவிந்து கிடக்கும் நிலையிலும் காட்சியளிக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேட ஏற்பட்டுள்ளது. எனவே குப்பையை தொட்டியில் போட அறிவுறுத்துவதோடு வெளியே கிடக்கும் குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்