சுகாதார சீர்கேடு

Update: 2022-10-26 10:57 GMT

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் இருந்து விளாங்காடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் அருகில் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேகரிக்கப்படும் குப்பைகளை உடனக்குடன் அகற்றவும், அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது ரபீக், திட்டுவிளை.

மேலும் செய்திகள்