தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-10-08 16:21 GMT

பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளையில் இருந்து விளாங்காடு சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் அருகில் தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகம்மது ரபீக், திட்டுவிளை.

மேலும் செய்திகள்