விருதுநகர் அருகே பாவாலி பஞ்சாயத்து பகுதியில் உள்ள அய்யனார் நகரில் குடிநீர் குழாய் அருகே குப்பைகள் அகற்றப்படாத நிலையில் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பஞ்சாயத்து நிர்வாகம் அய்யனார் நகர் பகுதியில் பரவலாக குப்பைகள் அகற்றாத நிலையில் உள்ளதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பஞ்சாயத்து நிர்வாகம் அய்யனார் நகர் பகுதியில் முறையாக துப்புரவு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.