குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-26 11:15 GMT
கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூர் அரசு பள்ளி அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக பள்ளி வகுப்பறைக்குள் மாணவ- மாணவிகள் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க குப்பைகளை அகற்றி, அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்