அகற்ற வேண்டிய குப்பைகள்

Update: 2022-09-23 16:20 GMT

சேலம் 29-வது வார்டு ரத்தினசாமிபுரம் பகுதியில் குப்பை தொட்டி நிறைந்து காணப்படுகிறது. குப்பைகளை குப்பை தொட்டியில் போட முடியாமல் பொதுமக்கள் சாலையில் கொட்டுகின்றனர். அந்த வார்டு, பெரிய வார்டு என்பதால் வாரத்திற்கு ஒருமுறை தான் குப்பைகள் அள்ளப்படுகின்றன. இதனால் குப்பைகள் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் தினமும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்