அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளை பார்த்து குறைப்பதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.