சென்னை அடையாறு, ருக்மணி நகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பின்புறம் கஸ்தூரிபாய் நகர் 4-வது மற்றும் , 5-வது மெயின் ரோடு சாலையின் நடுவில் இருபுறமும் செடி ,கொடி , மரம் , அடர்ந்து காணப்படுகிறது. இதனால் அருகில் இருக்கும் வீடுகளில் தேள் , பூரான் போன்ற விஷமுள்ளவை படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, வீடுகளில் உள்ள குழந்தைகள், பெண்கள் , என அனைவரும் அச்சப்படுகின்றன. உடனடியாக சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.