திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் பேருந்து நிலையம் அருகே விபத்துகளை தடுப்பதற்காக தடுப்பு வேலிகளை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர். இந்நிலையில் சில சமூக விரோதிகள் தடுப்பு வேலிகளை அப்புறபடுத்தி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.