உத்திரமேரூர் கட்டியாம்பந்தல் ஊராட்சி மற்றும் இதனை சுற்றி, சின்னமாங்குளம், பெருங்கோழி, தளவராம்பூண்டி, காரியமங்கலம், காட்டுக்கொல்லை, ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மட்டுமே தொழிலாக கொண்டுள்ளனர். இதில் கால் நடை வளர்ப்பு என்பது இப்பகுதியில் மிக முக்கிய வாழ்வாதாரமாக கருதப்படுகிறது. இப்பகுதிக்கு கால்நடை மருத்துவமனை இல்லாததால் கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் இதர சேவைகளுக்கு சுமார் 15. கி.மீ துாரத்தில் உள்ள உத்திரமேரூர் செல்லும் நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாகின்றனர். எனவே கட்டியாம்பந்தல் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.