பராமரிப்பில்லாத கால்வாய்

Update: 2022-08-12 14:49 GMT

செம்பரம்பக்கம் மற்றும் போரூர் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் கால்வாய் பாய்கடை, தட்டாங்குளம், எம்.ஆர்.கே நகர் வழியாக மணப்பாக்கம் அருகே அடையாறு ஆற்றில் சென்று கலக்கிறது. இந்த கால்வாயை முறையாக பராமரிக்காததால் மழை நாட்களில் இந்த கால்வாய் நிரம்பி வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. கால்வாயை தூர்வாருவதோடு, கால்வாயில் கழிவுநீர் கலப்பதையும் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்