வாலாஜாபாத் பஸ் நிலையத்திற்கு, சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் நிலையத்திற்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பொதுமக்கள் பஸ் வரும் வரை அமர்ந்திருப்பதற்கு இருக்கைகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் இருக்கைகள் வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டும்.