கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2022-08-12 14:46 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் படப்பை ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலை ஓரம் உள்ள கால்வாய்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கிய நிலையில் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசி, தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. கால்வாய்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி கழிவு நீர் செல்ல வழி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

மேலும் செய்திகள்