பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-12 14:43 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவாலங்காடு பகுதியில் உள்ள பெரியகளக்காட்டூர் ஊராட்சி சின்னகளக்காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இருக்கிறது . கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் கிராம நிர்வாக அலுவலர் இந்த கட்டிடத்தை பயன்படுத்துவதில்லை. பக்கத்து ஊரில் உள்ள அலுவலகத்தை தான் பெரும்பாலும் கிராம அலுவலர் பயன்படுத்துகிறார். இதனால் கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்யும் சூழல் அமைகிறது. மக்களின் சிரமத்தை போக்க கிராம நிர்வாக அலுவலகம் சீர் செய்யப்படுமா? 

மேலும் செய்திகள்