திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி மேற்கு தெருவில் கோயில் சுவற்றை ஒட்டி குப்பைகள் குவிக்கப்பட்டு இருப்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அங்கிருந்து அகற்றி அந்த இடத்தையும் சுத்தம் செய்துவிட்டனர். அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் மகக்ள் பாராட்டை தெரிவித்தனர்.