காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம் சானிட்டோரியம் பகுதியில் உள்ள ஜவஹர்லால் தெருவில் மழைநீர் வடிகால் மூடியானது சாலையில் சமதளத்தில் அமையாமல் பள்ளம் போல் இருந்து வருகிறது. எனவே போக்குவரத்து மிகுதியாக நிறைந்த இந்த சாலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது விபத்து ஏற்படுகிறது.எனவே வாகன ஓட்டிகளை பாதுகாத்திட துறை சார்ந்த அதிகாரிகள் செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.