கால்நடை மருத்துவமனை வேண்டும்

Update: 2022-08-11 15:17 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கட்டியாம்பந்தல் மற்றும் இதனை சுற்றி உள்ள கிராமங்களில் பெறும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதிக்கு கால்நடை மருத்துவமனை இல்லாததால் கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை பெற சுமார் 15. கி.மீ துாரத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கட்டியாம்பந்தல் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்