ஆபத்தான குளம்

Update: 2022-08-11 14:57 GMT

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிகத்தூர் கிராமத்தில் சாலையோரம் குளம் ஒன்று தடுப்பு வேலி ஏதுமில்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த குளமானது நீர் இருப்பது தெரியாத அளவிற்கு தாமரை இலைகள் மலர்ந்து உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த குளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே இந்த குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்