காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 -வழிப்பாதை சாலைகளில் முக்கிய சாலையாக வண்டலூரிலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள் தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் வாகனம் வந்து செல்கிறது. இந்த நிலையில் படப்பை, செரப்பனஞ்சேரி, கரசங்கால், ஒரகடம் ஆகிய பகுதிகளில் அதிகமான கால்நடைகள் சுற்றி திரிகிறது. விபத்துக்களை தடுப்பதற்கு சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?