பராமரிப்பில்லாத பூங்கா

Update: 2022-08-01 14:23 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மின்சார வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள பூங்கா கடந்த ஒரு வருடமாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவில் இருக்கக்கூடிய விளையாட்டு உபகரணங்கள் நடைபாதை அனைத்தும் துருபிடித்து காணப்படுகிறது. இதனால் பாம்புகள், பூச்சிகள், உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிலிருந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பூங்காவினுள் நுழைந்து கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்