காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் ரூ. 60 கோடியில் புதிய நீர்தேக்கம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தொடரும் பணி இன்று வரை முடிந்தபாடில்லை. இது குறித்து படப்பையில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது காஞ்சீபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளரை தொடர்பு கொள்ளுங்கள், எங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர். எனவே பணியை விரைந்து முடித்து வெள்ள நீரை தேக்குவதற்கு முறையான அதிகாரியை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.