காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டு தெரு, கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு சந்திப்பில் மழை பெய்யும் போதெல்லாம் குளம் போல தண்ணீர் தேங்கி விடுகிறது. மழை காலங்களில் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டுகள் அவதிக்கு உள்ளாகிறார்கள். தேங்கி நிற்கும் மழை நீரை நிரந்தரமாக வெளியேற்ற வழி செய்யாமல், சம்பந்தபட்ட நிர்வாகம் தற்காலிகமாக அவ்வப்பொழுது தண்ணீரை உறிஞ்சி எடுத்து செல்கிறார்கள். மழைக்காலம் தொடங்கும் முன்பு சாலை ஓரத்தில் இருக்கும் கால்வாய் சீரமைத்து நிரந்தரமாக மழை நீர் செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும்.சாலையா? குளமா?