
காஞ்சீபுரம் மாவட்டம் எல்லப்பா நகர் 2-வது தெருவில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சில வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.