பயணிகள் கோரிக்கை

Update: 2023-05-31 13:27 GMT

திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாக்கம், அரண்வாயல், வெங்கத்தூர் ஆகிய கிராமங்களில் போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் காலை நேரங்களில் ஆபத்தான முறையில் படிகட்டில் பயணம் செய்கின்றனர். இது விபத்து ஏற்பட வழி வகுக்கிறது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்