கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-05-31 13:24 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருப்பதி கொடை ரோடு எம்.ஜி.ஆர். புரம் உயர் வருவாய் லேக் வீயூ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படவும் வழி செய்கிறது.மேலும் கொசுகள் உற்பத்தியாகி நோய் தொற்றும் பரவும் சூழல் உள்ளது. எனவே அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்