அங்கன்வாடி மையத்திற்கு சுற்று சுவர் வேண்டும்

Update: 2023-05-17 13:16 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவலாங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் கிராமத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இரண்டு மையத்திற்கும் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து போட்டு விடுகிறார்கள். இதனால் காலையில் வருகின்ற பெற்றோர்கள் ஆசிரியர்கள் முகம் சுளிக்கின்ற சூழல் உருவாகிறது. எனவே குழந்தைகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்