காணாமல் போன தெரு பெயர்களை

Update: 2023-05-10 13:46 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன தெருகளின் பெயர் பலகைகள் தற்போது ஒன்று கூட உருப்படியாக இல்லாமல் காணாமல் போனதால் வெளியூரில் இருந்து வருபவர்கள் தெருக்களை கண்டுபிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பல இடங்களில் பலகைகள் எழுத்துக்கள் உதிர்ந்து வெள்ளை பலகைகளாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் இருக்கும் பெயர் பலகைகளில் காணவில்லை. கண்ணீர் அஞ்சலி போன்ற நோட்டீசுகள் ஓட்டப்பட்டு காட்சியளிக்கின்றன. பேரூராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஒவ்வொரு தெருக்களிலும் புதிய பெயர் பலகை வைக்க வேண்டும் என பேரூராட்சிக்கு பொதுமக்களின் கோரிக்கையாகும். 

மேலும் செய்திகள்