குப்பை கழிவுகள்

Update: 2023-05-10 13:43 GMT

திருவள்ளூர், அணக்கட்டுசேரி கிராமம் கூவம் ஆற்றின் கரைகளில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த இடத்தை குப்பை கொட்டும் இடமாகவே மாற்றிவிட்டனர். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வயதானவர்களும், குழந்தைகளும் அவதிப்படுகிறார்கள். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்