இடிந்த நிலையில் அரசு பள்ளி

Update: 2023-05-10 13:40 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி பழுதடைந்தும் இடிந்த நிலையில் உள்ளது. இதனால், அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் தற்காலிகமாக பள்ளி செயல்பட்டு வருகிறது. சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடம் கட்டி பள்ளியை புதுபிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்