போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-04-26 14:05 GMT

காஞ்சீபுரம்மாவட்டத்தில் முக்கிய சாலையாக உள்ள வண்டலூர் வாலாஜாபாத் சாலை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில் செல்லும் 6 வழி சாலை சந்திப்பு மைய பகுதியில் ஒரகடம் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் நடவடிக்கை எடுக்க பொதுமக்களின் கோரிக்கை.

மேலும் செய்திகள்