போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-19 13:49 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன்சாவடி - குன்றத்தூர் சாலை, கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் இருந்து குன்றத்தூர் பேருந்து நிலையம் வரை காலை, மாலை நேரங்களில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்