எரியாத மின் விளக்கு

Update: 2023-03-19 12:54 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ,திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட மேல் அயனம்பாக்கம் கிராமம் செட்டி 3-வது குறுக்கு தெருவில் உள்ள மின்விளக்கு பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. எனவே மின் வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மின் விளக்கு பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்