பிரச்சனை சரி செய்யப்பட்டது

Update: 2023-03-19 12:39 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் விவசாய நிலத்தில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார துறையினரின் உடனடி நடவடிக்கையால் மின் கம்பி சரி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த மின்சார துறையினருக்கும் துணைநின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்