தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-11 12:37 GMT

திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் வானகரம் செல்லும் சாலை அருகே கழிவுநீர் தேங்கி அகற்றப்படாமலே உள்ளது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது துர்நாற்றம் வீசுவதோடு நோய்த்தொற்று பரவுமோ! என்ற அச்சம் உணர்வும் ஏற்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்றி சாலையை சீர்செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்