சாலை மோசம்

Update: 2023-01-08 14:57 GMT

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சிவகாசி நகர் பதியில் உள்ள சாலை மோசமாக உள்ளது. இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்