அபாயகரமான பள்ளம்

Update: 2023-01-08 14:55 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பாதியோடு நிறுத்தப்பட்டதால் கால்வாய்கள் மூடப்படாமல் ஆபத்தாக காட்சியளிக்கிறது. மேலும் மின்விளக்குகளும் எரியாமல் இருப்பதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த கால்வாயானது நடைபாதையில் உள்ளதால், முதியவர்கள் மற்றும் பாதசாரிகள் இரவு நேரங்களில் தவறி விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே திறந்த நிலையில் இருக்கும் இந்த கால்வாயை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்