சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-01-01 13:56 GMT

திருவள்ளூர் மாவட்டம் பரங்கிமலை நாசரேத்புரம் காந்தி சிலை அருகே கடந்த 1 மாதமாக சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அவலமும் அரங்கேறுகிறது. மேலும் தேங்கியிருக்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்