சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

Update: 2023-01-01 12:21 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா பிரபலமான சுற்றுலா தளமாகும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பூங்காவில் உள்ள கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. மேலும் பூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான நாட்களில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதே இல்லை. இதனால் உயிரியல் பூங்காவுக்கு வருகை தரும் உள்ளூர், மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியுடன் பூங்காவை விட்டு வெளியேறும் காட்சியை அடிக்கடி பார்க்கமுடிகிறது.

மேலும் செய்திகள்