காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் உள்ள பாலாண்டீஸ்வரர் கோவில் செல்லும் தெருவின் நுழைவு பாதையில் உள்ள சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. சிறிய மழை பெய்தாலே அந்த இடத்தில் நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே சிதிலமடைந்துள்ள சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.