அகற்றப்படாத மரம்

Update: 2022-12-14 14:51 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து திருமுடிவாக்கம் வழியே செல்லும் பாதையில் அமைந்துள்ள பாலத்தை ஒட்டி மரம் ஒன்று வளர்ந்திருந்தது. சமீபத்தில் பெய்த அடை மழை மற்றும் புயல் காரணமாக அந்த மரம் முறிந்து விழுந்தது. விழுந்த மரம் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் கிடப்பதோடு பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து முறிந்த மரத்தை அகற்றுவதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்