பஸ் வசதிக்காக காத்திருக்கும் மக்கள்

Update: 2022-12-11 13:59 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி - கும்மிடிப்பூண்டி இடையே இருக்கும் அத்தங்கி காவனூர்‌‌, பூரிவாக்கம் போன்ற கிராமங்களில் பஸ் வசதி இல்லை. மேலும் அரசு பஸ்கள் வேறு வழிகளில் இயக்கப்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். அவசரகால மருத்துவ தேவைகளுக்கு கூட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்