தீர்வு கிடைக்குமா?

Update: 2022-12-07 14:30 GMT

திருவள்ளுவர் மாவட்டம் மணலி புதுநகரில் இருக்கும் குடிநீர் தொட்டியில் இருந்து வாகனங்கள் முலம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் தினந்தோறும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே குடியிருப்பு பகுதியில் வாகனங்கள் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்